NATIONAL

பெல்டா நிர்வாகி மெகாட் ஜஹாருடின் ராஜினாமா!

கோலாலம்பூர், ஜூன் 25-

பெல்டா நிர்வாகி பதவியில் இருந்து விலகுவதாக டான்ஸ்ரீ மெகாட் ஜஹாருடின் அறிவித்துள்ளார். இவரது பதவி விலகல் ஜூன் 30ஆம் தேதி அமலுக்கு வரும் என்று கூறப்பட்டது.  மெகாட் ஜஹாருடின் தனது ராஜினாமா கடிதத்தை நேற்று வழங்கியதாக பெல்டா ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

“இந்த வாழ்க்கையில் துவக்கமும் முடிவும் உள்ளன. என்னைப் பற்றி கடவுள் என்ன திட்டமிட்டுள்ளார் என்பது குறித்து நான் சிந்திக்கிறேன்” என்று மெகாட் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமைப்பு பொருளாதார விவகாரத் துறை அமைச்சின் கீழ் செயல்படுவதால், இதன் புதிய நிர்வாகியை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி விரைவில் அறிவிப்பார் என்று பெல்டா கூறியது.


Pengarang :