ஈப்போ, ஜூன் 4-
போக்குவரத்து நெரிசல் அதிகமானால் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை அருகே உள்ள அவசர வழியைத் திறப்பது குறித்து பேராக் சாலை போக்குவரத்து துறை (ஜேபிஜே) பரிசீலிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சிலிம் ரீவர் பகுதியில் போக்குவரத்து தற்போது சீராக இருந்தாலும், தேவை ஏற்பட்டால் அங்குள்ள அவசர வழி பொது மக்களின் பயனீட்டிற்கு திறக்கப்படும் என்று பிளஸ் நிறுவனத்தின் இயக்குனர் செவெரினஸ் துகா கூறினார்.
“கடந்த மே 29 முதல், இங்குள்ள போக்குவரத்து சீராகவே உள்ளது. வரும் ஜூன் 7, 8 தேதிகளில் நெரிசல் அதிகமானால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் அவசர வழி திறக்கப்படும்” என்றும் அவர் சொன்னார்.
இதனிடையே ,கடந்த மே 29 தொடங்கி இன்று வரை, பல்வேறு சாலை குற்றங்களுக்காக 1,099 சம்மன்கள் வெளியிடப்பட்டுள்ளன என்றார் அவர்.