SELANGOR

வரி செலுத்துவோருக்கு முன்னுரிமை அளிப்பீர்! – அமிருடின் ஷாரி

செலாயாங், ஜூன் 18-

ஊராட்சி மன்றங்கள் அனைத்தும் தத்தம் மன்றத்திற்கு வரி செலுத்துவோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார். அவ்வாறு செய்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட வரி செலுத்துவோரிடம் இருந்து ஆக்கப்பூர்வ கருத்துகளை எதிர்பார்க்க முடியும் என்றார் அவர்.

“இது மக்களுடன் நல்லுறவு கொண்டுள்ள அரசாங்கப் பணியாளர்களுக்கு முக்கிய அடைவுநிலை குறியீடு சிறப்பு ஊக்குவிப்பு தொகை வழங்கும் திட்டத்திற்கு ஏற்புடையதாக இருக்கும்” என்றார்.
மூன்ற மாத போனஸ் தொகையானது அரசு பணியாளர்கள் தங்கள் பணிகளை சிறந்த முறையில் ஆற்ற ஓர் ஊக்குவிப்பாக இருக்கும் எனத் தாம் நம்புவதாக அவர் சொன்னார்.


Pengarang :