புத்ரா ஜெயா, ஜூன் 3-
நோன்பு பெருநாளின் முதல் நாளனறு இங்குள்ள ஸ்ரீபெர்டானா கோம்ப்ளெக்ஸில் பிரதமர் துன் டாக்டர் மாகாதீரும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களும் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பை நடத்துவர்.
இந்த பொது உபசரிப்பு காலை 10 மணி தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும் என்று பிரதமர் துறை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
இந்தத் திறந்த இல்ல உபசரிப்பில் பொருத்தமான ஆடை அணிந்து பொது மக்கள் திரளாகக் கலந்துக் கொள்ள வேண்டும் என்று அவ்வறிக்கை மேலும் கூறியது. இந்நிகழ்வில் பொது மக்கள் கலந்து கொள்வதற்கு புத்ராஜெயா செண்ட்ரல், மஸ்ஜிட் துவாங்கு மிர்ஸான் ஜைனால் அபிடின் மற்றும் மஸ்ஜிட் புத் ரா ஆகிய பகுதிகளில் இருந்து ஸ்ரீபெர்டானா செல்வதற்கு இலவச பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் போக்குவரத்து சேவை காலை 9.30 மணி தொடங்கும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.