NATIONAL

அடிப் மரண விசாரணை முடிவுற்றது!

ஷா ஆலம், ஜூலை 24-

தீயணைப்புப் படை வீரர் முகமது அடிப் முகமது காசிமின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியும் விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்கு இனி சாட்சி எவரும் இல்லை என்பதால் மரண விசாரணை ஒரு முடிவுக்கு வந்தது.

சாட்சியம் அளித்த அனைத்து சாட்சிகளின் வாக்குமூலங்களில் நீதிமன்றம் மன நிறைவடைவதால், புதிதாக சாட்சிகளை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மரண விசாரணை நீதிபதி ரோஃபியா முகமது கூறினார்.

“ஆயினும், இந்த விசாரணையின் தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றார் அவர்.
இதனிடையே, இன்றைய நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவுற்றதும், சம்பந்தப்பட்ட தரப்புகள் தங்கள் வாதத் தொகுப்புகளை எழுத்து வடிவில் ஆகஸ்ட் 21ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :