SELANGOR

அவதூறு புகார்களைக் கண்டு நான் கலங்கவில்லை – அமிருடின் ஷாரி

கோம்பாக், ஜூலை 11:

சிலாங்கூர் சட்டமன்ற பெண் உறுப்பினர் ஒருவருடன் தன்னை தொடர்புப்படுத்தி பரவி வரும் தகவல்களால் தான் சற்றும் களங்கவில்லை என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார். மாறாக, தனது பணிகளைத் தான் வழக்கம் போல் செய்து வருவதாகவும் புலன் விசாரணை செய்யும் பணியை போலீசாரிடம் விட்டுவிட்டதாகவும் அவர் சொன்னார்.

“இந்த விவகாரம் என்னை சற்றும் பாதிக்கவில்லை. நான் வழக்கம் போல் புன்னகையோடு பணி செய்து வருகிறேன். இவ்விவகாரம் குறித்து எனது அதிகாரி போலீசில் புகார் செய்துள்ளார். எனவே, காவல் துறை அதன் விசாரணையை மேற்கொள்ளட்டும்”. இது போன்ற சூழல்களைக் கடந்து செல்வது வழக்கமான ஒன்று என்பதை எனது குடும்ப உறுப்பினர்கள் புரிந்து வைத்துள்ளனர் என்றார் அவர்.

தலைவர்களின் நற்பெயர்களைக் களங்கப்படுத்துவதற்காக அவர்கள் மீது இது போன்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தப்படுகிறது என்பதையும் தான் உணர்ந்துள்ளதாக அமிருடின் கூறினார்.


Pengarang :