கோல லங்காட், ஜூலை 1-
இங்குள்ள தாமான் மெஸ்ரா காஞ்சோங் டாராட்டில் நடைபெற்ற கோத்தா ரோயோங் நிகழ்ச்சியை முன்னிட்டு 40 குப்பைத் தொட்டிகளை (எளிதில் இடம் மாற்றக்கூடியவை ) கோல லங்காட் மாவட்ட மன்றத்தின் 22ஆவது வட்டாரத்திடம் கேடிஇபி நிறுவனம் வழங்கியது.
“இந்த குப்பைத் தொட்டிகளை வழங்கிய நடவடிக்கையானது நிறுவனத்தின் சமூக கடப்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாகும்” என்று அதன் பொது தொடர்பு மற்றும் ஊடக பிரிவு தலைவர் மாஹ்ஃபுஸா முகமது தார்மிடி கூறினார்.
இதே நிகழ்ச்சியில் பரிசுக் கூடைகள் மற்றும் மின்னியல் பொருட்கள் ஆகியவற்றை அதிர்ஷ்ட குலுக்கு பரிசுகளாக கேடிஇபி நிறுவனம் வழங்கியது என்றார் அவர்.
அதேவேளையில், விரைவில் நடைபெறவிருக்கும் மறுசுழற்சி நிகழ்ச்சியை முன்னிட்டு ஓலாக் லெம்பிட் தேசிய பள்ளிக்கு 2 மறுசுழற்சி தொட்டிகளையும் நாங்கள் வழங்கினோம் என்றும் மாஹ்ஃபுஸா தெரிவித்தார்.