SELANGOR

செர்டாங் ஜெயா வணிக நடவடிக்கையில் அந்நியர் ஆதிக்கம்: கடைகளை மூட எம்பிஎஸ்ஜே உத்தரவு

செர்டாங், ஜூலை 2-

அந்நிய நாட்டு பிரஜைகளிடம் கடைகளை வாடகைக்கு விட்டிருந்த உள்நாட்டு வணிகர்களின் கடைகளை உடனடியாக மூடுவதற்கு சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் (எம்பிஎஸ்ஜே) உத்தரவு பிறப்பித்தது.
சம்பந்தப்பட்ட பகுதிகளின் வணிக நடவடிக்கையில் அந்நிய நாட்டவர்கள் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எம்பி எஸ்ஜே துணைத் தலைவர் முகமது ஜூல்குர்னாயின் சே அலி கூறினார்.

இங்குள்ள வணிகங்களை அசே மற்றும் வங்காளதேச பிரஜைகள் ஆதிக்கம் செலுத்தி வருவதாக பொது மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

“இதற்கு பின்னரும் அந்நிய நாட்டு பிரஜைகளிடம் தங்கள் கடைகளை வாடகைக்கு விடும் வணிகர்கள் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் எச்சரித்தார்.

 


Pengarang :