ஷா ஆலம், ஜூலை 2-
தேசிய விளையாட்டு மாதத்தை முன்னிட்டு வரும் அக்டோபர் மாதம் முழுவதும் நடைபெறவிருக்கும் விளையாட்டு போட்டிகளில் ஒரு மில்லியன் பேர் பங்கேற்பர் என்று சிலாங்கூர் இளைஞர் மற்றும் விளையாட்டு இலாகா (ஜேபிஎஸ்) இலக்கு நிர்ணயித்துள்ளது.
இம்மாதம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தனது தரப்பு திட்டமிட்டு வருவதாக அதன் இயக்குநர் சாப்ரான் அப்துல் பஹார் கூறினார்.
“இளைஞர், விளையாட்டு மற்றும் ராக்கான் மூடா ஆகியவை தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு சிலாங்கூர் ஜேபிஎஸ் தொடர்ந்து முயன்று வருகிறது” என்றார் அவர்.
“எனவே, இந்நிகழ்ச்சிகளில் ஒரு மில்லியன் பேர் பங்கேற்க வேண்டும் என்ற இலக்கை நாங்கள் நிர்ணயித்துள்ளோம்” என்றும் அவர் சொன்னார்.