SELANGOR

பெல்டா சோஹர்த்தோவில் புயலால் பாதிப்புற்ற குடும்பங்களுக்கு மாநில அரசு உதவித் தொகை!

ஷா ஆலம், ஜூலை 11:

பெல்டா சோஹர்த்தோவில் வீசிய புயலால் பாதிப்புற்ற 39 குடும்பங்களுக்கு முதல் கட்ட உதவியாக மாநில அரசு 39,250 வெள்ளியை வழங்கியது. இந்த உதவித் தொகையை சுகாதாரம், சமூகநலன், மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாஹ்முட் வழங்கினார்.

கடுமையாகச் சேதமடைந்த 18 வீடுகளுக்கு தலா 500 வெள்ளி வழங்கப்பட்ட வேளையில் சிறிய அளவில் சேதமடைந்த 121 வீடுகளுக்கு தலா 250 வெள்ளி வழங்கப்பட்டது. வீடுகள் அடைந்த சேதம் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பு மதிப்பீடு செய்யும் என்றும் அதன் அறிக்கை பின்னர் மாநில பேரிடர் செயற்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


Pengarang :