கோலாலம்பூர், ஜூலை 24-
மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி மாமன்னராக நியமிக்கப்பட்டது முதல் ஒருமைப்பாட்டிற்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறார். இந்நாட்டு மக்கள் தாங்கள் அனுபவித்து வரும் அமைதி, பாதுகாப்பு மற்றும் சுபிட்சம் ஆகியவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதே மக்களுக்கு மாமன்னர் விடுக்கும் வேண்டுகோளாகும்.
கடந்த மார்ச் 11ஆம் தேதியன்று 14ஆவது நாடாளுமன்ற கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்தபோது மாமன்னர் இந்த வேண்டுகோளை முன் வைத்தார்.
ஜூலை 30ஆம் தேதி அன்று நாட்டின் 16ஆவது மாமன்னராக அரியணை அமரவிருக்கும் சுல்தான் அப்துல்லா நாட்டின் சுபிட்சத்தையும் சமூக ஒற்றுமையையும் பேணிக் காத்திட வேண்டும் என்று மக்களுக்கு நினைவுறுத்துகிறார்.