NATIONAL

1எம்டிபி வழக்கு விசாரணையை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

கோலாலம்பூர், ஜூலை 8-

1எம்டிபி நிறுவனம் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது சுமத்தப்பட்ட ஊழல் மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனை உட்பட 25 குற்றச்சாட்டுகள் மீதான வழக்கு விசாரணை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதுபோல ஆகஸ்ட் 19ஆம் தேதி நடைபெறும்.

இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கக் கோரி சட்டத் துறை தலைவர் தோமி தோமஸ் செய்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி நிராகரித்தார்.
“வழக்கை ஒத்திவைக்கக் கோரி மூன்றாவது தடவையாக இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப மேலும் ஓர் ஒத்திவைப்புக்கு அனுமதி வழங்கப்படலாகாது.”

எனவே, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதுபோல இவ்வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்தார்.


Pengarang :