PBTSELANGOR

சுங்கை கிள்ளான் ஒரு பொழுது போக்கு தலமாக உருவெடுக்கும்

சுபாங், ஆக.9-

2 மில்லியன் வெள்ளி செலவில் மேற்கொள்ளப்படும் எஸ்ஜே ரிவர்ஃபுரோண்ட் திட்டம் மூலம் சுபாங் ஜெயாவைக் கடந்து செல்லும் 3.8 கிலோ மீட்டர் நீளமான சுங்கை கிள்ளானின் தரம் உயர்த்தப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் சுங்கை கிள்ளான் பகுதி பல்வேறு வசதிகளைக் கொண்ட ஒரு பொழுது போக்கு தலமாக உருவெடுக்கும் என்று சுபாங் ஜெயா நகராண்மைக் கழக தலைவர் நோராய்னி ரோஸ்லான் கூறினார்.

இதுவரை வீடுகள், கடைகள் அல்லது தொழிற்பேட்டை பகுதிகளுக்கு பின்னால் ஓடும் சுங்கை கிள்ளான் உட்பட பல்வேறு ஆறுகளை எவரும் கண்டு கொள்ளாத வண்ணம் இருந்தன. ஆனால், இத்திட்டமானது மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளும் பாதுகாக்கப்படுவதற்கான முதல் நடவடிக்கையாக அமையும் என்றார் அவர்.
இத்திட்டம் முழுமையாக நிறைவேற இரண்டு ஆண்டுகள் பிடிக்கும் என்று அவர் சொன்னார்.


Pengarang :