புத்ராஜெயா, ஆகஸ்ட் 29:
கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எதிர் பார்க்கப்படும் அமைச்சரவை மாற்றத்தில் இடம் பெற மாட்டார். இதற்கு காரணம், அமைச்சரவையில் காலி இடமில்லை என்பதே ஆகும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.அன்வார் அமைச்சரவையில் இடம் பெறுவாரா என்ற செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த போது அவர் இவ்வாறு கூறினார்.
” நாங்கள் அமைச்சரவையில் எந்த மாற்றத்தையோ அல்லது கூடுதல் அமைச்சரை பற்றியோ பேசவில்லை. மேலும் அமைச்சரவை இலாகா மாற்றங்களை பற்றியும் விவாதிக்கவில்லை என்று பெர்சத்து கட்சியின் உச்ச மன்ற கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு துன் மகாதீர் விளக்கம் தந்துள்ளார்.