‘சுபாங், ஆக.9-
அங்சானா அடுக்குமாடி குடியிருப்பின் சுவரில் மெர்டேக்கா சுவரோவியம் வரையும் திட்டத்தில் “தெ ஆர்ட் மார்க்கெட்” குழுவைச் சேர்ந்த 10 ஓவியர்கள் பங்கேற்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
150,000 வெள்ளி செலவில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டமானது பொது இடங்களை சுத்தமாக வைத்திருப்பதோடு பொது சொத்துக்களை மதிப்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ மக்களின் கவனத்தை ஈர்க்கும் தனித் தன்மையை இந்த சுவரோவியம் கொண்டிருக்கும்” என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ முகமட் மெந்தேக் கூறினார்.
“முப்பரிமாண ஓவியமான இது சுற்றுப் பயணிகளையும் கவர்வதோடு புகைப்பட கலையையும் ஊக்குவிக்கும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.