சுபாங், ஆக.5:
சமூக ஊடகங்களின் பொறுப்பற்ற “ஊடக செய்தியாளர்களை” எதிர்கொள்வதில் அரசாங்கமும் பாதுகாப்பு அமைப்புகளும் [பெரும் சவாலை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பொறுப்பற்ற சமூக ஊடகவியலாளர்கள் தாங்கள் பரப்பும் செய்திகள் ஏற்படுத்தும் விளைவுகளை புரிந்து கொண்டிருக்கவில்லை என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.
“அன்றைய நாட்களில் நாளிதழ்கள், தொலைக்காட்சி, வானொலி ஆகிய ஊடகங்கள் மட்டுமே செய்திகளை வெளியிட்டன. இந்தச் செய்திகள் யாவும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவையாக இருந்தன.”
“ஆனால், இன்றைய நவீன தொடர்பு யுகத்தில் செய்திகள் சமூக ஊடகங்கள் வழி அதிவிரைவாகப் பரவுகின்றன. இவற்றை எதிர்கொள்வது பெரும் சவாலாக உருமாறியுள்ளது” என்றார் அவர்.