RENCANA PILIHANSELANGOR

மலேசியாவில் அதிக நவீனமய மாநிலமாக உருவாகியிருக்கும் சிலாங்கூர்

சுபாங் ஜெயா, ஆக.21-

அனைத்துலக புள்ளி விவர கழகத்தின் உலக புள்ளிவிவர காங்கிரஸ் நடைபெறும் இடமாக சிலாங்கூர் தேர்வு பெற்றது மகிழ்ச்சியளிக்கும் ஒரு தகவலாகும்.
மலேசியாவின் மேம்பாடடைந்த ஒரு மாநிலமாகவும் பல்வேறு பரிணாமங்கள் கொண்ட மாநிலமாகவும் சிலாங்கூர் திகழ்கிறது என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கில் ஒரு பகுதியை சிலாங்கூர் பங்களிப்பதால் நாட்டின் பொருளாதார நாடித் துடிப்பாகவும் இம்மாநிலம் விளங்குகிறது என்றார் அவர்.

மலேசியாவில் அதிக நவீனமய மாநிலமாக உருவாகியிருக்கும் சிலாங்கூர் 91.4 விழுக்காடு மேம்பாடடைந்த நகரங்களைக் கொண்டுள்ளது என்றும் அமிருடின் சொன்னார்.


Pengarang :