SELANGOR

யுனிசெல் விளையாட்டு கட்டடம் திறக்கப்பட்டது

ஷா ஆலம், ஆக.13-

தரம் உயர்த்தப்பட்ட சிலாங்கூர் பல்கலைக்கழக (யுனிசெல்) விளையாட்டு கட்டடம் அதன் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. “மேம்படுத்தப்பட்டுள்ள வசதிகளால் இந்த கட்டடத்தின் அனைத்து விளையாட்டு துறை வசதிகளின் தோற்றம் உயர்த்தப்பட்டுள்ளதாக” இதன் தலைவரும் இணை வேந்தருமான பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமது ரிட்சுவான் ஒஸ்மான் கூறினார்.

தரம் உயர்த்தப்பட்டுள்ள அனைத்து விளையாட்டு வசதிகளையும் நன்கு பயன்படுத்திக் கொள்வதோடு இவற்றை பேணிக் காக்கவும் வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

மேலும், இப்பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் விளையாட்டுத் திறன் மேம்படுவதற்கு இது துணை புரியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :