SELANGOR

வழிப்பறி கொள்ளையர்களிடம் கவனமாக இருப்பீர்! – பெட்டாலிங் ஜெயாவில் இயக்கம்

ஷா ஆலம், ஆக.20-

பெட்டாலிங் ஜெயா பழைய டவுனில் வழிப்பறி கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து செக்‌ஷன் 18 ருக்குன் தெத்தாங்கா சங்கம் ‘வழிப்பறி கொள்ளையர்களிடம் கவனமாக இருப்பீர்’ எனும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.

வழிப்பறி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இங்குள்ள மக்களிடம் இருந்து பல்வேறு புகார்களைத் தமது தரப்பு பெற்றுள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்ற உறுப்பினர் தெரென்ஸ் டான் தெக் செங் கூறினார்.

செக்‌ஷன் 18இல் ஜாலான் ஓஸ்மானை இணைக்கும் மேம்பாலத்தை மோட்டார் சைக்கிளோட்டிகள் எளிதாகக் கடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதே இந்த கொள்ளைச் சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது என்றார் அவர்.

“‘ஜாலான் சிலாங்கூர் மற்றும் ஜாலான் ஓஸ்மான் ஆகிய சாலைகள் நெடுகிலும் வழிப்பறி கொள்ளைச் சம்பவங்கள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் 20 அறிவிப்புப் பலகைகளை நாங்கள் பொருத்தியுள்ளோம்” என்று அவர் சொன்னார்.


Pengarang :