NATIONAL

12-ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் முயல்கள் வளர்ப்பு விரிவுபடுத்தப்படும்

சைபர் ஜெயா, ஆக.5-

12ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் நாட்டில் முயல்கள் வளர்ப்பை விரிவுபடுத்த கால்நடை சேவை இலாகா பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட முயல் இறைச்சிக்கான சந்தை மற்றும் தேவை குறித்து தமது தரப்பு ஆராய்ந்து வருவதாக அதன் இயக்குனர் டத்தோ டாக்டர் குவாஸா நிஸாமுடின் கூறினார்.

“இந்த விவகாரம் 12ஆவது மலேசிய திட்டத்தின் கீழ் விவாதிக்கப்பட்டால், இந்தச் சந்தையை விரிவாக்கம் செய் போதுமான ஒதுக்கீடு கிடைக்கும். இது வெறும் கண் துடைப்பு திட்டமாக இருக்கக் கூடாது என அமைச்சு விரும்புகிறது” என்றார்.
“எனவே, சம்பந்தப்பட்ட தொழில்துறையின் முக்கிய நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு நல்கவிருக்கிறோம், இதன் மூலம் மக்கள் பயனடைய வேண்டும்” என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.


Pengarang :