SELANGOR

அரசு சாரா அமைப்புகளுக்கு பெகாவானிஸ் ஆதரவு!

ஷா ஆலம், செப்.9-

அரசு சாரா இயக்கங்களுக்கான வாய்ப்பையும் வசதியையும் வழங்க சிலாங்கூர் மகளிர் சமூகநல அமைப்பு (பெகாவானிஸ்) என்றுமே தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவேக பங்காளித்துவத்தின் மூலம் ஒவ்வொரு நடவடிக்கையும் அதன் இலக்கை மிகச் சிறப்பாக அடையும் வாய்ப்பு ஏற்படுவதாக அதன் தலைவர் மாஸ்டியானா முகமது கூறினார்.

இந்த கூட்டு நடவடிக்கையின் வழி, அரசு சாரா அமைப்புகள் மறைமுகமாக வலுவூட்டப்படுவதோடு சம்பந்தப்பட்ட அமைப்புகள் குறித்து மக்கள் மத்தியில் நம்பிக்கையும் மேம்படும் என்றும் அவர் சொன்னார்.
“இன்றைய சூழலில், அரசு சாரா அமைப்புகள் நாட்டின் அரசு இயந்திரத்தின் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன” என்றார் அவர்.


Pengarang :