RENCANA PILIHANSELANGOR

அரசு நிலங்களில் அந்நிய நாட்டவர்களா? கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

ஷா ஆலம், செப்.20-

அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலங்களில் அத்து மீறி குடியேறு அந்நிய நாட்டவர்கள் மீது மாநில அரசு கடுமையான நடவடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. சுங்கை பூலோவில் உள்ள தேசிய தொழு நோய் மைய நிலத்திலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

“நில அலுவலகம் இந்த விவகாரத்தை கவனித்து வரும் வேளையில், நாமும் இதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்: என்றார் அவர்.
“நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான தகவலும் விவரங்கள் கிடைத்த உடன் அமலாக்க தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுப்பர். ஏனெனில், அரசாங்க நிலத்தில் அந்நிய நாட்டவர் வசிப்பதை அரசு கடுமையாக கருதுகிறது” என்றும் அவர் சொன்னார்.


Pengarang :