NATIONALRENCANA PILIHANSELANGOR

ஆசிய தொழில்நுட்ப குழுமத்துடன் சந்திப்பு: மந்திரி பெசார் தலைமையில் சிலாங்கூர் பேராளர் குழு சீனா பயணம்

ஷா ஆலம், செப்.3-

சீனா, ஷென்சென்னில் உள்ள ஆசியாவின் மிகப் பெரிய சமூக விளையாட்டு அலைவரிசை நிறுவனமான தென்செண்ட் ஹோல்டிங்ஸ் குழுமத்தை சந்திக்க சிலாங்கூர் பேராளர்களுக்குத் தலைமையேற்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி சீனா சென்றடைந்தார்.

1998ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது முதல் இந்த அனைத்துலக நிறுவனம் சீனாவில் மிகப் பெரிய முதலீட்டை கொண்டுள்ளது என்றார் அவர்.
“சமூக அலைவரிசை, டிஜிட்டல் கட்டண முறை, பொழுதுபோக்கு, விவேகம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் இந்நிறுவனம் ஆசியாவில் முதல் முறையாக 500 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்த நிறுவனமாகும்” என்றார்.

“இந்தச் சந்திப்பின்போது, சிலாங்கூர் அரசாங்கப் பேராளர்கள் இக்குழுமத்தின் வர்த்தக மேம்பாட்டு பிரிவு இயக்குனர் டான் சானுடன் உரையாடினர்”.
இந்த உரையாடலின்போது, பிகேஎன்எஸ் மூலம் சிலாங்கூரில் இந்நிறுவனம் தனது வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.


Pengarang :