Malaysian Deputy Prime Minister Muhyiddin Yassin delivers his speech during the launching of Sustainable and Responsible Sukuk Investment, issue by Khazanah at a school in Kuala Lumpur on May 18, 2015. The Malaysian Insider/Najjua Zulkefli
NATIONAL

உணர்ச்சிமயமான விவகாரங்கள் எழுப்பபடுவதை அரசாங்கம் சகித்துக் கொள்ளாது! – முஹீதீன்

புத்ராஜெயா, செப்.3-

இன, சமய நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவிற்கக் கூடிய உணர்ச்சிமயமானத் தகவலைப் பரப்பும் தரப்பிடம் அரசாங்கம் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது என்று தெரிவிக்கப்பட்டது.
மக்களின் பேச்சுரிமையை அரசாங்கம் கட்டுப்படுத்தவில்லை. மாறாக, பரிமாறப்படும் தகவல் உறுதி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முஹீதீன் யாசின் கூறினார்.

போலியான தகவல் பரவுவதைத் தடுப்பதற்கும் இந்த அவதூறின் காரணமாக மக்கள் மத்தியில் சச்சரவு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும் இத்தகைய நடைமுறை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

பேச்சுரிமைக்கும் வன்முறை மற்றும் வெற்ப்பைத் துண்டும் பேச்சுக்கும் மெல்லிய கோடு அளவிலான வித்தியாசம் உண்டு என்று மாதாந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் முஹீதீன் தெரிவித்தார்.


Pengarang :