SELANGOR

கண்ட இடங்களில் குப்பைகள் வீசும் பொறுப்பற்ற நபர்களைக் கண்காணிக்க சிசிடிவி

ஸ்ரீகெம்பாங்கான், செப்.2:

தொழில்துறை பகுதியில் குப்பைகள் வீசப்படும் சம்பவத்திற்குத் தீர்வு காண அங்கு சிசிடிவி பொருத்த 10 ஆயிரம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஸ்ரீகெம்பாங்கான் சட்டமன்ற உறுப்பினர் இயன் யோங் ஹியான் வா கூறினார்.

சம்பந்தப்பட்ட பகுதியில் குப்பைகள் வீசப்படுவது குறித்து அங்குள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நடத்துநர்கள் அளித்த புகாரின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
“இந்த ரகசிய ஒளிப்பதிவு கேமிராவை (சிசிடிவி) கூடிய விரைவில் பொருத்துவதன் மூலம் பொறுப்பற்ற முறையில் குப்பைகளை வீசும் நடவடிக்கைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கலாம்” என்றார் அவர்.

“சம்பந்தப்பட்ட பகுதியில் சிசிடிவி பொருத்தப்படுவதன் மூலம் அப்பகுதியில் பொறுப்பற்ற முறையில் குப்பைகள் வீசப்படும் சம்பவங்கள் குறைந்தால், மற்ற பகுதிகளிலும் இந்த நடவடிக்கை தொடரப்படும்” என்றும் அவர் சொன்னார்.


Pengarang :