ஷா ஆலம், செப்.18-
புகைமூட்டம் காரணமாக பெட்டாலிங் பெர்டானா நாவட்டம், கிள்ளான், கோல சிலாங்கூர், கோம்பாக், உலு சிலாங்கூர், சபாக் பெர்ணம், கோல லங்காட் மற்றும் பெட்டலிங் உத்தாமா உட்பட 538 பள்ளிகள் மூடும்படி உத்தரவிடப்பட்டன.
ஷா ஆலம், புத் ராஜெயா,மற்றும் கிள்ளான் பகுதிகளில் காற்றுத்தூய்மைக்கேடு குறியீடு 200ஐ தாண்டியதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று கல்வியமைச்சு உத்தரவு பிறப்பித்தது.
அந்த உத்தரவைத் தொடர்ந்து சிப்பாங்கில் 52 பள்ளிகள், உலு லங்காட்டில் 61, கோல லங்காட்டில் 21, கோம்பாக்கில் 23, பெட்டாலிங் கார்டனில் 139, பெட்டாலிங் உத்தாமாவில் 86 பள்ளிகள் மூடப்பட்டன.
இந்தப் பள்ளிகள் மூடப்பட்டதால், 584595 மாணவர்கள் இன்று பள்ளிகளுக்குச் செல்லவில்லை.