NATIONALSELANGOR

செப்டம்பர் 8-இல் கத்ரி நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்படும்

கோலாலம்பூர், செப்.5-

புரோ லிந்தாஸ் குழும ஏற்பாட்டிலான ஜிசிஇ – எல்மினா இரட்டை போட்டிக்கு (டூயல்தோன்) வழிவிடும் வகையில் செப்டம்பர் 8ஆம் தேதி கத்ரி நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதிகாலை 3 மணி தொடங்கி மாலை 3 மணி இந்நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்படும் என்று புரோலிந்தாஸ் குழும தொடர்பு பிரிவு தலைவர் முஸ்தாபா கமால் அரிப்பின் கூறினார். இந்த சாலை அடைப்பில் புக்கிட் ஜெலுத்தோங் டோல் சாவடி தொடங்கி லாகோங் டோல் சாவடி வரையில் அனைத்து சந்திப்பு சாலைகளும் மூடப்படும் என்றார் அவர்.

வடக்கிலிருந்து ஷா ஆலம், கிள்ளான் மற்றும் தெற்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலை பயனர்கள் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய நெடுஞ்சாலை *என்கேவிஇ) ஆகியவற்றைப் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :