கோலாலம்பூர், செப்.20-
மலேசியா எனது இரண்டாவது இல்லம் (எம்எம்டுஎச்) எனும் திட்டத்தின் கீழ் விற்கப்படாத சொகுசு வீடுகளை வாங்குவோருக்கு நிரந்த குடியிருப்பு அந்தஸ்து வழங்கப்படாது என்று அரசாங்கம் உத்தரவாதம் அளித்தது.
மாறாக, சம்பந்தப்பட்ட வீடுகளை வாங்குவோருக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்ட 10 வருட விசா வழங்க மட்டுமே அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜீசா கூறினார்.
“இவர்களுக்கு மைகார்ட் அல்லது நிரந்தர குடியிருப்பு அந்தஸ்து (பிஆர்) நிச்சயம் வழங்கப்படாது. 10 வருட விசா மட்டுமே வழஙப்படும். இவ்விவகாரம் குறித்து அமைச்சரவை விவாதிக்கும்” என்றார் அவர்.
ஆயினும், சம்பந்தப்பட்ட அந்நிய நாட்டவர்களுக்கு நாட்டின் நிதிநிலைக்கு பங்களிக்கும் ‘லிக்குவிட் அசெட்; எனப்படும் பரிவர்த்தனை சொத்து இருப்பது உறுதி செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.