katanya kepada pemberita selepas merasmikan Persidangan Akauntan Sektor Awam Kebangsaan ke-29
NATIONAL

ஜோ லோவை பாதுகாக்கவில்லை! நஜிப் முன்னாள் அதிகாரி வாக்குமூலம்

கோலாலம்பூர், செப்.18-

சுல்தான் மிர்ஸான் சைனால் அபிடினின் அலோசகராகத் தம்மை சித்தரித்த வர்த்தகர் ஜோ லோவுக்குத் தாம் பாதுகாப்பு கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் முன்னாள் சிறப்பு ஐகாரிகளில் ஒருவர் இன்று மறுத்தார்.

1எம்டிபி தொடர்பான வழக்கில் நஜிப்பின் வழக்கறிஞரான டான்ஸ்ரீ முகமது ஷாபீ கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில், பிரதிவாதி தரப்பின் எட்டாவது சாட்சியான டத்தோ அம்ஹாரி எப்பெண்டி நசாருடின் 43) மேற்கண்டவாறு கூறினார்.

சுல்தானின் ஆலோசகராக தம்மை தவறாகச் சித்தரித்துக் கொண்ட ஜோ லோவ் விவகாரம் குறித்து உங்கள் மேலதிகாரிக்கு எழுத்து மூலம் (மேமோ) வழங்கினீர்களா என்று முகமட் ஷாபி கேள்வி தொடுத்தார்.
தாம் அவ்வாறு செய்யவில்லை என்றும் ஆயினும் தமது மேலதிகாரியிடம் இதனை தெரிவித்ததாக அகமரு எப்பேண்டி பதிலளித்தார்.


Pengarang :