NATIONAL

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல்: மக்களின் வாழ்க்கை தரம் மீது பக்காத்தான் கவனம் செலுத்தும்!

கோத்தாபாரு, செப்.27-

தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது மீது பக்காத்தான் கூட்டணி கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதேவேளையில், இனம் மற்றும் சமய அடிப்படையிலான பிரச்சாரங்களை இக்கூட்டணி முற்றாக புறக்கணிக்கும் என்று அமானா கட்சியின் துணைத் தலைவர் டத்தோ சாலேஹுடின் ஆயுப் கூறினார்.
“மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது உட்பட பக்காத்தான் மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கப்படும்” என்றார் அவர்.

“சமயம் மற்றும் இனவாதம் சார்ந்த அரசியலை நாங்கள் முற்றாக புறக்கணிப்போம். மக்கள் மத்தியில் மிதவாதத்தை ஊக்குவிப்போம்” என்றும் அவர் சொன்னார்.


Pengarang :