PBTSELANGOR

நில வடிவமைப்பு போட்டியில் பங்கேற்பீர்! எம்பிஎஸ்ஏ அழைக்கிறது

ஷா ஆலம், செப்.10-

ஷா ஆலம் நகராண்மைக்கழக ஏற்பாட்டில் (எம்பிஎஸ்ஏ) வரும் நவம்பர் முதல் நாள் தொடங்கி அடுத்த செப்டம்பர் மாதம் வரை நடைபெறவிருக்கும் நில வடிவமைப்பு போட்டியில் பொது மக்களளும் பள்ளிகளும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்று எம்பிஎஸ்ஏ கேட்டுக் கொண்டது.

இப்போட்டி தனிநபர் வீடமைப்பு மற்றும் பள்ளி என்று இரு பிரிவுகளாக நடத்தப்படவிருப்பதாக கழகத்தின் பொதுத் தொடர்பு பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

“வீடமைப்பு மற்றும் பள்ளி பகுதிகளின் சுற்றுப் புறப் பகுதிகளில் தூய்மையும் அழகும் பேணப்படுவதன் அவசியம் குறித்து பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இப்போட்டியின் நோக்கங்களில் ஒன்றாகும்” என்றார் அவர்.
இப்போட்டியில் இலவசமாக பங்கேற்கலாம் என்றும் எம்பி எஸ் ஏ நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியில் வாழும் அனைவரும் பங்கேற்கலாம் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :