NATIONAL

முகமது அடிப் மரண விசாரணை: தாக்கப்பட்டதால் மரணமடைந்தார்! – நீதிமன்றம் தீர்ப்பு

ஷா ஆலம், செப்.27-

இருவருக்கும் மேல்பட்ட தனிநபர்கள் தாக்கியதன் காரணமாகவே தீயணைப்பு படை வீரர் முகமது அடிப் முகமது காசிமிற்கு மரணம் சம்பவித்துள்ளது என்று ஷா ஆலம் மரண விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டின் மீது புலன் விசாரணை மேற்கொள்வதற்கு இவ்வழக்கு தேசிய சட்டத்துறை தலைவர் மற்றும் காவல் துறையிடம் ஓப்படைப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது.

முன்னதாக, முகமது அடிப்பின் குடும்பத்தின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் யாஹ்யா ஒஸ்மான் இந்த விசாரணையின் தீர்ப்பை செவமடுப்பதற்காக ஷா ஆலம் மரணவிசாரணை நீதிமன்றம் வந்தடைந்தார்.

கடந்தாண்டு நவம்பர் 27ஆம் தேதி சுபாங் ஜெயா, யூஎஸ்ஜே 25இல் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற கலவரத்தின் போது முகமது அடிப் கடுமையாகக் காயமுற்றார்.
தேசிய இருதய கழகத்தில் 21 நாட்கள் உயிருக்குப் போராடிய முகமது அடிப், அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 17ஆம் தேதி மரணமடைந்தார்.


Pengarang :