Penerima memilih barangan keperluan harian ketika Program Jom Shopping Skim Mesra Warga Emas DUN Selat Klang di Econmart Sungai Bertih Jalan Yadi pada 30 September 2019. Foto FIKRI YUSOF/SELANGORKINI
SELANGOR

மூத்த குடிமக்களுக்கு ‘பிறந்த நாள் பரிசு’

கிள்ளான், செப்.30-

தாங்கள் பிறந்த மாதத்தில் மூத்த குடிமக்களுக்கான ஜோம் ஷாப்பிங் திட்டத்தின் கீழ் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுவதை செலாட் கிள்ளான் சட்டமன்ற தொகுதி மக்கள் ஒரு சிறந்த பயனுள்ள திட்டமாக வர்ணிக்கின்றனர்.
இந்நடிவடிக்கையயானது தன்னைப் போன்ற மூத்த குடிமக்களை மாநில அரசு நினைவில் வைத்திருப்பதைப் புலப்படுவதாக இத்திட்டத்தின் கீழ் பற்றுச்சீட்டை பெற்றவர்களில் ஒருவரான வூன் மூய் ( வயது 81) கூறினார்.

“இது ஓர் அருமையான திட்டம். இது தொடர வேண்டும். எனக்கு நீண்ட ஆயுள் இருப்பின் இதை அடுத்த ஆண்டும் நான் பெறுவேன்” என்றார் அவர். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பற்றுச்சீட்டைக் கொண்டு தாமும் தமது மனைவியும் அத்தியாவசியப் பொருட்களை வாங்கியதாக கூறிய இஸ்மாயில் அலி ( வயது 64), வேலை செய்ய இயலாத தரப்பினருக்கு இது ஒரு பேருதவியாக அமையும் என்றார்.


Pengarang :