SEPANG, 24 Ogos — Operasi di Lapangan Terbang Antarabangsa Kuala Lumpur (KLIA) mula beransur pulih selepas mengalami gangguan sistem sejak 22 Mac lepas ketika tinjauan fotoBernama sehingga 10 pagi tadi. Kelihatan pesawat-pesawat Malaysia Airline telah bersedia untuk berlepas. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONALRENCANA PILIHAN

விமான நிறுவனம் அரசுக்குச் சொந்தமாக இருக்க வேண்டிய அவசியமில்லை – மகாதீர்

கோலாலம்பூர் செப் 1:

தேசிய விமான நிறுவனத்தை ஒவ்வொரு நாடும் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.
தேசிய விமான நிறுவனத்தை மலேசியா கொண்டுள்ள போதிலும் அது அரசாங்கத்திற்கு சொந்தமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் சுட்டிக் காட்டினார்.

“நாட்டில் பல விமான நிறுவனங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்றை தேசிய விமான நிறுவனமாக அழைக்கலாம். காரணம் அவை நாட்டின் அடையாளத்தை கொண்டிருக்கக்கூடும்”.
ஆனால் அதனை தனியார் துறை நடத்தி வரமுடியும் என மலேசிய விமான நிறுவனத்தின் சஞ்சிகைக்கு எழுதிய கட்டுரையில் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்..


Pengarang :