NATIONALSELANGOR

2020 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டு : நற்பண்புகளை வெளிக்கொணரும் இயக்கம்

ஷா ஆலம், செப்.17-

2020 மலேசியாவிற்கு வருகையளிக்கும் ஆண்டை முன்னிட்டு சுற்றுப் பயணிகளிடம் தங்களது நன்னெறி பண்புகளை வெளிப்படுத்தும்படி என்று சிலாங்கூர் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
மலேசியாவின் தனித்தன்மைமிக்க ஒருமைப்பாட்டை உலகிற்கு எடுத்துரைக்கும் முகவர்களாக ஒவ்வொரும் திகழ வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வியக்கம் மேற்கொள்ளப்படுவதாக கலாச்சாரம் மற்றும் சுற்றுலா, மலாய் பாரம்பரியத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அப்துல் ரஷிட் அசாரி கூறினார்.

“நமது இடங்களையும் உணவுப் பொருட்களை அறிமுகப்படுத்துவதோடு பல்லின மக்களோடு நாம் ஒன்றிணைந்து வாழும் வாழ்க்கை முறையையும் சுற்றுப் பயணிகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்” என்றார் அவர்.

நமது நாட்டை ஒரு வரலாற்றுப் பூர்வமான அழகிய, தூய்மையான நாடாக வெளிநாட்டவர்களுக்கு எடுத்துரைக்கும் நடவடிக்கைக்கு அனைவரும் தயாராக வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.


Pengarang :