கிள்ளான், அக்டோபர் 31:
விவேக கைப்பேசி மூலம் வாகன நிறுத்துமிட கட்டணம் செலுத்தும் செயலியை (எஸ்எஸ்பி) கிள்ளான் நகராண்மைக் கழகம் (எம்பிகே) இன்று அறிமுகப்படுத்தியது. இதன் காரணமாக இனி கிள்ளான் மக்கள் வாகன நிறுத்துமிட கட்டணத்தை எளிதாக செலுத்தலாம்.
சிலாங்கூர் மக்கள் பாதுகாப்பான சுற்றுச் சூழலையும் புத்தாக்கத்தையும் அனுபவிப்பதற்கு வழி வகுத்துள்ள மாநில அரசின் நடவடிக்கைகளை கழகத்தின் தலைவர் டத்தோ முகமது யாசிட் பிடின் கூறினார்.
அதேவேளையில், விவேக கைப்பேசியைப் பயன்படுத்தி வாகன நிறுத்துமிட கட்டணத்தை செலுத்தும் நடவடிக்கையானது எம்பிகே அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதி வாழ் மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் என்றார் அவர்.
மேலும், இந்த புதிய முறை அறிமுகத்திற்கு பின்னர், இங்குள்ள மக்கள் வாகன நிறுத்துமிட கட்டணத்தை கூப்பன் மூலமாகவோ எஸ்எஸ்பி செயலி மூலமாகவும் செய்வதற்கு தேர்வை பெற்றிருப்பர் என்றும் அவர் சொன்னார்.