பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 19:
இந்திய தொழில் முனைவர்கள் மாநில அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்கத்தின் வியாபார வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதி ராவ் நினைவு படுத்தினார்.
“தெகூன் கடனுதவி மற்றும் ஹிஜ்ரா கடனுதவி மட்டுமின்றி பல்வேறு அரசாங்கத்தின் உதவித் திட்டங்களை நேரடியாகச் சென்று பெற்றுக் கொள்ள வேண்டும். அப்படி பெற்றுக் கொள்ளவில்லை என்றால் ஒதுக்கப்பட்ட தொகை மீட்டுக் கொள்ளப்படும். ஆக இந்தியர்கள் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி தலைமையிலான பல்வேறு திட்டங்களை பயன் படுத்தி கொள்ள வேண்டும்,” என்று கணபதி ராவ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தெகூன், ஹிஜ்ரா, அரசு சாரா இயக்கங்கள், இந்திய சமுதாய தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்திய தொழில் முனைவர்கள் கலந்து கொண்டனர்.