SELANGOR

குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துவோருக்கு சிறப்பு ஊக்குவிப்பு சலுகை!

பத்து கேவ்ஸ், அக்.15-

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவோரை ஊக்குவிக்க வரும் நவம்பரில் தாக்கல் செய்யப்பட்விருக்கும் சிலாங்கூர் 2020 வரவு செலவு திட்டத்தில் கூடுதல் ஊக்குவிப்பு சலுகை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்தின் பயனீடிற்கு போதுமான குடிநீர் இருப்பதை உறுதி செய்ய குடிநீரை பொறுப்பான வகையிலும் சிக்கனமாகவும் பயன்படுத்தப்படுவதை ஊக்குவிக்கும் பொருட்டு கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்படும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

ஒரு தனிநபர் நாளொன்றுக்குச் செலவிடும் 222 லிட்டர் தண்ணீரின் அளவை 180 லிட்டராகக் குறைக்க மாநில அரசு இலக்கு கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
இந்த இலக்கை அடுத்த ஓர் இரு ஆண்டுகளில் நிறைவேறினால் சிறப்பாக இருக்கும் என்று அமிருடின் கூறினார்.


Pengarang :