ஷா ஆலம், அக்டோபர் 29:
எதிர் வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 1, மாலை நான்கு மணிக்கு 2020-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி தாக்கல் செய்வார் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அலுவலகம் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இந்த திட்டத்தில் இதற்கு முன் அறிவிக்கப் பட்ட வரவு செலவுத் திட்டத்தில் இருந்த இரண்டு முக்கிய அம்சங்களை அடித்தளமாக கொண்டிருக்கும் என கூறியிருக்கிறது.
” மாநில அரசாங்கம் ஐந்து சந்திப்புகளை சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடத்தியது. 2020-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் ஐந்து முக்கிய அம்சங்களான பொருளாதார வளர்ச்சி, கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சமூக நலம் ஆகியவைகளில் கவனம் செலுத்தப்படும்,” என்று அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டத்தின் முழு அறிக்கை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு amirudinshari.com அகப்பக்கத்தில் வழி பெற்றுக் கொள்ள முடியும். அதேபோல் நேரலையை www.selangortv.my அல்லது உடனடி செய்திகளை www.selangorkini.my. வழிி தெரிந்துக் கொள்ள முடியும் என மந்திரி பெசார் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.