ஷா ஆலம், அக்.16-
இம்மாநிலம் அடுத்தாண்டில் மேலும் ஆக்கப்பூர்வமாகவும் ஆற்றலுடன் மிளிர்வதை உறுதி செய்ய 13 திட்டங்களை ஸ்மார்ட் சிலாங்கூர் அறிமுகப்படுத்தவிருக்கிறது.
இத்திட்டங்கள் முழுமையாக நிறைவேறுவதற்கு மாநில அரசு உறுதி பூண்டுள்ளதோடு கடப்பாடும் கொண்டிருப்பதாக அதன் நிர்வாகப் பிரிவு இயக்குநர் டாக்டர் ஃபாஹ்மி ஙா கூறினார்.
வரும் நவம்பர் மாதம் மாநில சட்டமன்றத்தில் 2020 வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யும்போது இத்திட்டத்திற்கான ஒதுக்கீட்டை மந்திரி பெசார் அமிருடின் ஷாரி அறிவிப்பார் என்றார் அவர்.
அடுத்த ஆண்டில் ஆசியான் நாடுகளுக்கு பயணிக்கும் போது இத்திட்டத்தின் நடப்பு சாதனைகளை எடுத்துரைக்க மந்திரி பெசார் விருப்பம் கொண்டுள்ளார் என்று ஃபாஹ்மி கூறினார்.