பொந்தியான், நவ.15:
மசீச மற்றும் பாஸ் கட்சிகளுக்கு இடையே மத்தியஸ்தராகச் செயல்படும் அம்னோவின் நிலைப்பாடு உண்மையானதல்ல, மாறாக, இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆடும் கபட நாடகமாகும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கூறினார்.
மசீச மற்றும் பாஸ் கட்சி தலைவர்கள் இவ்விரு கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து பேசுவது வேறு, செயல்படுவது வேறாக இருந்து வந்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.
“”உண்மையானவர்கள் இல்லை. கபடதாரிகள். மலாய்க்காரர்கள் முன்னிலையில் மலாய் போராளிகள் என்பர். இங்கு வந்ததும் மலாய் அல்லாதவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதே இவர்களின் இலக்கு என்று அவர் சாடினார்.
இங்குள்ள அரசு சாரா இயக்கத்தினருடனான விருந்துபசரிப்புக்கு பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின் மகாதீர் மேற்கண்டவாறு பேசினார்.