Hee Loy Sian ketika Mesyuarat Ketiga (Bajet) Penggal Kedua Dewan Negeri Selangor Darul Ehsan Keempat Belas, Sidang Dun Selangor. Foto FIKRI YUSOF/SELANGORKINI
SELANGOR

சட்டமன்றம் இன்று ஒரு கணம் திகைப்பில் ஆழ்ந்தது!

ஷா ஆலம், நவ.7-

தொடர்ந்து நெகிழியிலான தண்ணீர் பாட்டல்களைப் பயன்படுத்துவது குறித்து சபாநாயகர் லிம் சுவீ லிம் கண்டிக்கப்பட்டதைக் கண்டு சிலாங்கூர் சட்டமன்றம் இன்று ஒரு கணம் திகைப்பில் ஆழ்ந்தது.

கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி மாநில அரசு அலுவலகங்களில் நெகிழியிலானப் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள வேளையில் சுவீ லிம் அதை மீறியுள்ளதை சுற்றுச் சூழல், பசுமை தொழில்நுட்பம், அறிவியல், புத்தாக்கம் மற்றும் பயனீட்டாலர் விவகாரத் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஹீ லொய் ஸியான் சுட்டிக் காட்டினார்.


“சபாநாயகர் ஏன் இன்னும் பிளாஸ்டில் பாட்டிலைப் பயன்படுத்துகிறார் என்று எனக்கு புரியவில்லை” என்று அவர் கூறியதும் சபையினர் அனைவரும் கரகோஷம் எழுப்பு அவர் கருத்தை வரவேற்றனர். இந்த ஆலோசனையை தான் ஏற்றுக் கொள்வதாக செகிஞ்சாங் சட்டமன்ற உறுப்பினருமான சுவீ லிம் கூறினார்.


Pengarang :