SELANGOR

சிலாங்கூரில் வேலையில்லாதோர் விகிதம் சரிந்துள்ளது!

ஷா ஆலம், நவம்பர் 5:

சிலாங்கூரில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேலையில்லாதோர் விகிதம் குறைந்த வண்ணம் உள்ளதாக முகமது கைருடின் ஒஸ்மான் கூறினார். மாநிலத்தின் வேலையில்லாதோர் விகிதம் 2016ஆம் ஆண்டில் 3.2 விழுக்காடாக இருந்தது. அது 2017, 2018ஆம் ஆண்டுகளில் 2.8 விழுக்காடாக சரிந்தது என்று இளைய தலைமுறையினர் & விளையாட்டு மற்றும் மனித மூலதன மேம்பாட்டு துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினரான முகமது கைருடின் சொன்னார்.

எனவே, 2019ஆம் ஆண்டில் இந்த விகிதாச்சாரம் 2.5 விழுக்காடாகக் குறைப்பதற்கு மாநில அரசு இலக்கு கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
மாநில நிலையிலான பெரிய அளவில் நடைபெறவிருக்கும் வேலைவாய்ப்பு சந்தை மீதும் மற்றும் மாவட்ட நிலையில் சிறிய அளவி நடத்தப்படவிருக்கும் வேலைவாய்ப்பு சந்தையிலும் மாநில அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :