பொந்தியான், நவ.15:
தாம் முந்தைய அரசான்கத்தின் பிரதமராக இருப்பதைப் போன்று சித்தரிக்கும் எதிர்க்கட்சிகளின் ஏமாற்று வேலையில் ஏமாந்துவிட வேண்டாம் என்றும். தாம் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் பிரதமர் என்றும் தஞ்சோங் பியாய் தொகுதி மக்களுக்கு துன் டாக்டர் மகாதீர் நினைவுறுத்தினார்.
தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்த இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் எதிர்க்கட்சியினர் அப்படி ஒரு தந்திரத்தை கையாண்டு மக்களை குழப்பத்துக் ஆழ்த்தி வருகின்றனர் என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
“நான் இப்போது அம்னோ தலைவர் இல்லை. தேசிய முன்னணீயின் தலைவரும் இல்லை. ஒரு சிலர் என்னை அம்னோ தலைவராகவே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். நான் பக்காத்தான் ஹராப்பான் தலைவர். நான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன்” என்றார் அவர்.
பெக்கான் நெனாஸில் அரசு சாரா இயக்கங்கள் ஏற்பாடு செய்திருந்த காலைச் சிற்றுண்டி விருந்தில் டாக்டர் மகாதீர் மேற்கண்டவாறு பேசினார்.