NATIONALSELANGOR

நிறைவான அடிப்படை கட்டமைப்பே ஜப்பான், சீன முதலீட்டாளர்களை கவர்ந்துள்ளன

ஷா ஆலம், நவம்பர் 5:

சிலாங்கூர் கொண்டுள்ள நிறைவான இயற்கை முறை மற்றும் அடிப்படை கட்டமைப்பு போன்றவை வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுக்கின்றன..
இவையே உலகப் பொருளாதார சக்திகளாகத் திகழும் ஜப்பான் மற்றும் சீன போன்ற நாடுகளின் முதலீட்டாளர்களையும் கவர்ந்துள்ளன என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

சீனாவைச் சேர்ந்த மேலும் 3 தொழிற்சாலைகளுக்கான நிலங்களைத் தேடி மலேசியா வந்துள்ளன. அவற்றின் முதலீட்டு மதிப்பு 3 பில்லியன் வெள்ளியாகும் என்றார் அவர். சிலாங்கூர் சட்டமன்றத்தில் இன்று வாய்மொழி வழி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அமிருடின் மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்.


Pengarang :