PBTSELANGOR

பி40 இளைஞர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எம்பிஎஸ்ஜே ஏற்பாட்டில் தொழில்திறன் பயிற்சி

சுபாங் ஜெயா, நவம்பர் 6:

பி40 எனும் குறைந்த வருமானம் பெறுவோர் பிரிவைச் சேர்ந்த இளையோர் திறனாற்றலைக் கொண்டிருந்தால் மட்டுமே தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும் என்று சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் ( எம்பிஎஸ்ஜே) துணைத் தலைவர் ஜுல்குர்னாய்ன் சே அலி கூறினார்.

எனவே, இவ்விளைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் பூச்சோம்க் கியாட் மாரா மையத்துடன் இணைந்த தொழில்திறன் பயிற்சியை எம்பிஎஸ்ஜே ஏற்பாடு செய்துள்ளது என்றார்.
இது இப்பகுதியில் இளைஞர் சமுதாயத்தை துடிப்புமிக்க போட்டியாற்றலுடன் கூடிய சமுதாயமாக மாற்றுவதெ இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும் என்று அவர் விவரித்தார்.

இத்திட்டத்தில் பங்குபெற்போருக்கு ஆட்டோமோடிஃப் தொழிநுட்பம், சீரமைப்பு தொழில்நுட்பம் மற்றும் வாகனங்களுக்கு சாயம் மற்றும் மின்சார கம்பிகள் பொருத்துவது குறித்து விளக்கம் அளிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :