KUALA LUMPUR, Nov 5 — Prime Minister Tun Dr Mahathir Mohamad delivering his special address at the 11th International Conference on Financial Crime and Terrorism Financing (IFCTF) 2019 organised by The Asian Institute of Chartered Bankers (AICB) at a hotel today.?Themed, “Building Trust and Transparency: Collaborate, Accelerate, Strengthen”, IFCTF 2019 is expected to provide insights into new and emerging technologies to take on financial crime and implement more effective and efficient preventive controls to strengthen defences against this growing threat.?–fotoBERNAMA (2019) COPYRIGHTS RESERVED
NATIONALRENCANA PILIHAN

மகாதீர்: அடுத்த பிரதமர் அன்வார் தான் !!!

கோலாலம்பூர், நவம்பர் 5:

நாட்டின் அடுத்த பிரதமராக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம்தான் என்று மீண்டும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் உறுதி செய்துள்ளார். அவருக்கு பதிலாக பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலி பிரதமராக நியமிக்கப்பட மாட்டார் என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த பொதுத் தேர்தல் வரை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருக்குமாறு சில தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் இருந்தபோதிலும்அதற்கு முன்பதாகவே தாம் பதவி விலக உறுதிபூண்டுள்ளதாக, சிட்னி மார்னிங் ஹெரால்டு நேர்காணலின் போது அவர்  கூறினார். 

அடுத்த தேர்தலுக்கு முன்னர் பதவி விலகுவதே எனது உறுதிநிச்சயமாக பதவி விலகுவேன்” என்று அவர் நேற்று திங்கட்கிழமை கூறினார்.

எவ்வாறாயினும்அது தொடர்பான குறிப்பிட்ட கால அவகாசத்தை கொடுக்க டாக்டர் மகாதீர் மறுத்துவிட்டார்

இது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நடக்கும் என்று என்னால் கூற முடியாதுஆனால், நான் உறுதியளித்தபடி நிச்சயமாக விலகுவேன்” என்று மகாதீர் கூறினார்.


Pengarang :