NATIONALSELANGOR

யுனிசெல் பழைய கடன்களை அடைப்பதில் மாநில அரசு தீவிரம்

ஷா ஆலம், நவ.13-

30 மில்லியன் ரிங்கிட் வரையிலான யுனிசெல்லின் பழைய கடன்களை அடைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 2006ஆம் ஆண்டு தொடங்கி யுனிசெல் பல்கலைக்கழ்கத்தின் வருவாய் சரிந்து வருவதால் ஏற்பட்ட கடன் அவை என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

பழைய கடன் பொன்ற அம்சங்களை வரிசைப் படுத்தி வருக்கிறோம் என்றும் நேற்று இதன் வாரிய இயக்குநர்களின் சந்திப்புக் கூட்டமும் நடத்தப்பட்டது என்றார் அவர்.
2006ஆம் ஆண்டு தொடங்கி ஏற்பட்டு வரும் வருவாய் சரிவின் காரணமாக இக்கடன்கள் 30 மில்லியன் ரிங்கிட் வரை உயர்ந்துள்ளன ர்ன்றும் அவர் சொன்னார்.
ஆயினும், தற்போது யுனிசெல் முற்றிலும் மாறுப்பட்டுள்ளதோடு பெஸ்தாரி ஜெயா வளாகத்தில் மட்டுமே 4,000 மாணவர்கள் உயர்க்கல்வி மேற்கொண்டு வருகின்றனர். என்றார் அவர்.


Pengarang :