SELANGOR

வாகன நிறுத்துமிடக் கட்டணத்தை நிர்ணயிக்க ஊராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் உண்டு

ஷா ஆலம், நவம்பர், 5:

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்துமிடக் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் ஊராட்சி மன்றங்களுக்கு உண்டு.
ஊராட்சி மன்ற கூட்டங்களில் வாகன நிறுத்துமிடக் கட்டணம் நிர்ணயிக்கப்படும். ஆயினும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பரிந்துரையைத் தெரிவிக்கலாம் என்று ஊராட்சி மன்றம், பொது போக்குவரத்து மற்றும் புதுக்கிராம மேம்பாட்டு துறைக்கான ஆட்சிக்குழு உருப்பினர் இங் ஸீ ஹான் தெரிவித்தார்.

வாகன நிறுத்துமிடக் கட்டணம் விதிக்கப்படும் பகுதியை மன்ற உறுப்பினர்களும் பங்கேற்கும் ஊராட்சி மன்ற கூட்டம் முடிவு செய்யும் என்றார் அவர்.
ஆயினும், சம்பந்தப்பட்ட பகுதிகள் குறித்த தங்களின் பரிந்துரையை சட்டமன்ற உறுப்பினர்களும் முன்வைக்கலாம் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :