பொந்தியான், நவம்பர் 7:
இம்மாதம் 16ஆம் தேதி தஞ்சோங் பியாய் நாடாளுமன்ர தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில், வாக்காளர்கள் பொய்யான செய்திகளை நம்பி முடிவெடுக்கக் கூடாது மாறாக நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் கார்மைனி சார்டினி மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இடைத்தேர்தல் பிரச்சார காலத்தில் சில ஊடகங்கள் வெளியிடும் பொய்யான தகவல்களை திறமையான வாக்காளர்களாக இருப்பின் எளிதில் நம்பிவிட மாட்டார்கள் என்று ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் கூறினார்.
இது தஞ்சோங் பியாய் மக்கள் ஊடகங்களைக் காட்டிலும் திறமையானவர்களாக இருப்பதோடு பொய் தகவல்களால் கவரப் படாமல் இருப்பதை பொறுத்தது என்றார் அவர்.
பரவி பொய் தகவல்கள் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தொகுதியை நம்பிக்கை கூட்டணி தக்க வைக்கும் வாய்ப்பை பாதிக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு கிட் சியாங் மேர்கண்டவாறு பதிலளித்தார்.